தேனி : தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட், இன்சூரன்ஸ், முகக்கவசம் ஆகியவை இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் தங்களது ‘பைன் லேப்’ இயந்திரம் மூலம் வாகன ஓட்டுனர்களை நிறுத்தி விசாரிக்காமல் அபராதம் விதித்து வருகின்றனர். இதை அறியும் வாகன ஓட்டிகள் அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்துகின்றனர். வாகன சோதனை செய்யும் பெரும்பாலான போலீசார் பைன் லேப் மூலம் விதி மீறி வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிப்பது, அவர்களுக்கே தெரியாத நிலை உள்ளது. வாகனங்களின் உரிமங்களை புதுப்பிக்கும்போதோ அல்லது விற்கும்போது அபராதம் விதித்தது தெரிய வரும்.