டெல்லி: ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் பகிரவேண்டாம் என அரசு அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.