சென்னை: பணம், பதவி, பொறுப்பு போன்றவை மாற்றத்திற்கு உட்பட்டவை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக இருந்ததால் விலகினேன். முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியாமல் பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது இயல்பு அல்ல என்று தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.