சென்னை: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரகள், பொதுத்துறை உறுப்பினர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒன்றிய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.