இந்தியாவில் ஒரே நாளில் 703 பேர் பலி... தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது: அடுத்த சில நாளில் 4 லட்சத்தை தொடும் ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.88 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.85கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 3,47,254 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,66,027 ஆக உயர்ந்தது.

* புதிதாக 703 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,88,396 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,51,777 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,60,58,806 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,18,825 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,692 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 93.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.23% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,60,43,70,484 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 70,49,779 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: