சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி பழனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அரவிந்த் (25), சேலத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு லீபஜார் பகுதியில் வந்துள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ₹2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றது. இதுபற்றி பள்ளப்பட்டி போலீசில் அரவிந்த் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபல கொள்ளையனான சேலம் சின்னேரி வயல்காடு சினிமா நகரை சேர்ந்த பாண்டியன் (35) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அதிரடியாக பாண்டியனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது கூட்டாளிகளான குமார் (30), அண்ணாமலை (37), சங்கர் (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.