இராமேஸ்வரம்: நாளை தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள 56 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். சென்னையில் நடந்த மீனவர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.