அலிகர்: உத்தரபிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் கூறினார். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இங்குள்ள முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங், 73 அட்ராலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘வருகிற சட்டசபை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்’ என்றார்.