திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 91 பேருக்கும், நேற்று 152 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.