U19 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

மும்பை: 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ஜாஸ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத், ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனோவ் பராத், சித்தார்த் யாதவ் ஆகிய 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் 17 பேர் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாற்று வீரர்களான 5 பேர் இந்தியாவில் இருந்து மேற்கு இந்திய தீவுகளுக்கு புறப்பட்டு செல்லக்கூடும் என தெரிகிறது.

Related Stories: