மும்பை: 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ஜாஸ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத், ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனோவ் பராத், சித்தார்த் யாதவ் ஆகிய 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.