திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களும், சென்னை, புதுச்சேரி, மறைமலைநகர், மயிலாப்பூர், மண்ணடி, திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு இடங்களில் வீட்டு மனைகள், கட்டிடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான விவசாய நிலங்களை திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு, காலவாக்கம் கிராம விவசாயிகள் குத்தகை அடிப்படையில் 3 தலைமுறைகளாக பயிர் செய்து வருகின்றனர்.குத்தகை அடிப்படையில் பயிர் செய்யும் நிலங்களை தவிர்த்து திருப்போரூர் கிராமத்தில் 75 ஏக்கர் 85 சென்ட் நிலங்களும், காலவாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் 17 சென்ட் நிலங்களும், தண்டலம் கிராமத்தில் 43 ஏக்கர் 32 சென்ட் நிலங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் பயிர் வைக்கும் விவசாயிகளுக்கு வருடாந்திர குத்தகை அடிப்படையில் ஏலம் விட முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.