காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவூட்ட குறைபாட்டால் ஏற்படும் நோய் தாக்கமும் என்ற கருத்தரங்கம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கிழம்பி ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சாா்பில் உடல்நலமும் உணவூட்ட குறைபாட்டால் ஏற்படும் நோய் தாக்கமும் என்ற கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார், அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் மோகனரங்கன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உயிர் வேதியியல் துறை தலைவர் முனைவர் புண்ணியக்கோட்டி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.வெங்கடேசன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விவரித்தார்.