களியக்காவிளை: குமரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:குடியரசு தின அணிவகுப்பில் தமிழக கலாச்சார ஊர்தியை அனுமதிக்காத ஒன்றிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார் போன்ற விடுதலை போராட்ட தியாகிகளை ஒன்றிய அரசு அவமதித்து விட்டது. இதற்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.