பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்கவும். புறப்பட்டு செல்லவும் இருவேறு ஓடுபாதைகள் உள்ளன. இதில் ஒன்றில் விமானம் தரையிறங்கினால், மற்றொன்றில் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்படும். ஆனால், சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர், கொல்கத்தாவுக்கு செல்வதற்கு 2 விமானங்கள் தயாராக இருந்தன. வரிசைப்படி விமானங்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் புறப்பட வேண்டும். ஆனால், சம்பவத்தன்று ஒரே நேரத்தில் 2 விமானங்களுக்கும் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.