சென்னை: கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை, தனிநபர்களுக்கு மறுதானம் வழங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், பால் கொடுக்கும் பசுக்களை மட்டுமே கோயில்களுக்கு தானமாக வழங்க வேண்டுமென்று அரசாணையில் உள்ள நிலையில் பால் கொடுக்காத பசுக்களும் தானமாக வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக இவற்றை மறுதானம் செய்யும் போது அவற்றை அடி மாட்டிற்காக வெளிச்சந்தையில் விற்கிறார்கள் என்றார்.