சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3வது அலையான ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 57,570 பேர் (நேற்று) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 4 வாரங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.