சென்னை: வாடகை தாயாக இருந்தால் ரூ.5 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக தனியார் மருத்துவமனை மீது பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நான், எனது தோழியான ரம்யா என்பவர் மூலம் அமைந்தகரை காவல் நிலைய எல்லையில் உள்ள குழந்தை பிறப்பிற்கான தனியார் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் முரளி என்பவர் வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்து மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு சென்றேன். அப்பொழுது ஒரு ஆண் குழந்தை என்றால் ரூ.4 லட்சம் என்றும், இரட்டை குழந்தை என்றால் ரூ.5 லட்சம் கொடுப்பதாக பேசி ஒப்பந்தம் செய்து கையெழுத்து பெற்றுக்கொண்டேன்.