தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் நாளை (20ம்தேதி) தெப்ப உற்சவ திருவிழா கொரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா நாளை (20ம்தேதி) மாலை 5 மணிக்கு மேல் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை மாலை குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க சித்திர சபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.