திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. கோயிலின் மூலவராக வன்மீகநாதரும் உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.