மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று 2வது சுற்று போட்டிகள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இதில் 6-1,6-1 என நேர் செட்டில் பார்டி வெற்றிபெற்றார். 8ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசா 6-0,6-3 என இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை சாய்த்தார். 15ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 6-3,5-7,5-1 என பிரான்சின் ஹார்மனிடானை வென்றார்.