×

12 வயது சிறுமி ஓட்டிய கார் மோதி பெண் பலி: விளையாட்டு உயிரை பறித்தது

கோபி: சிறுமி ஓட்டிய கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். கோபி அருகே உள்ள காஞ்சிக்கோயில் ஆர்கேவி.நகரை சேர்ந்தவர் வீரன். இவரின் மனைவி பாப்பாள் (65). இவரும் சொக்குமாரிபாளையத்தை சேர்ந்த சென்னி என்பவரின் மனைவி அரிக்காணி (70) என்பவரும் சொக்குமாரிபாளையத்தில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்க சென்றனர். இருவரும் வீட்டின் முன்அமர்ந்திருந்தபோது, அங்கு சிறுவலூரை சேர்ந்த பூவணன் (34) தனது காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அந்த காரில் பூவணனின் 12 வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென சிறுமி விளையாட்டாக காரை ஸ்டார்ட் செய்ததால் இயங்கிய கார் வேகமாக சென்று அங்கு அமர்ந்து இருந்த பாப்பாள், அரிக்காணி ஆகியோர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாள் உயிரிழந்தார்.  அரிக்காணிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாப்பாளுக்கு நல்லசாமி என்ற மகனும் பூவாத்தாள் என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : 12-year-old girl killed in car crash
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...