திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோபத்துடன் வரும் தாயாரை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்தும் பிரணய கலக உற்சவம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நேற்று நடந்தது. கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதுதான் இந்த உற்சவத்தின் நோக்கமாகும். இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே (வராக சுவாமி கோயில் எதிரில்) வந்தனர். இதைத்தொடர்ந்து, மலையப்ப சுவாமி 4 மாடவீதி வழியாக வராக சுவாமி கோயிலுக்கு எதிர்திசையில் வந்தடைந்தார். அப்போது தாயார்களை சுவாமி சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள், அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில் நின்றனர்.