சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்கள் சேர்க்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பொதுப்பிரிவினருக்கான 50 சதவீதம் ஒதுக்கீட்டில், அரசு மருத்துவர்கள் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 50 சதவீதம் ஒதுக்கீடு பெற்ற அரசு மருத்துவர்கள், பொது பிரிவிலும் பங்கேற்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.