சென்னை: சென்னை தாம்பரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பில் ஜெயக்குமார் என்பவரின் இல்லத்தில் கழிவுநீரானது அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொட்டியினை சுத்தம் செய்வதற்காக இன்று காலை ராஜேஷ், ஏழுமலை என்ற இருவர் பணிக்கு வந்துள்ளனர். இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். உள்ளே இறங்கிய சில நிமிடங்களில் அவர்கள் விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனர். மயங்கிய உடனேயே அருகில் இருப்பவர்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.