புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து அரசு தொழிற்நுட்ப பயிற்சி நிறுவனங்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஐடிஐ நிறுவனங்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா விடுமுறை அறிவித்தார். புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அம்மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.