செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி கடந்த 9ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் தண்டாயுதபாணிக்கு தினமும் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது நேற்று நடந்த தைப்பூச விழாவில் மூலவர் தண்டாயுதபாணிக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காவடி பூஜைகளும், வீதியுலாவும், பிற்பகலில் முருகபெருமானுக்கு பால் அபிஷேகமும் அருட்பெருஞ்ஜோதி சுவாமி மார்பு மீது மாவு இடித்தலும், மிளகாய் பொடி அபிஷேகமும் நடந்தது.