ரோஜா பூங்காவில் செர்ரி மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஜப்பான் நாட்டின் தேசிய மலராக செர்ரி மலர்கள் உள்ளன. இந்த மரங்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. குளிர் காலங்களில் இந்த மரங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது ஊட்டியில் பனிக்காலம் என்பதால், பல்வேறு பகுதிகளிலும் இந்த மலர்கள் பூத்துக் காணப்படுகின்றன. ஊட்டியில் ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள மரங்களில் இந்த செர்ரி மலர்கள் பூத்துள்ளன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: