ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஜப்பான் நாட்டின் தேசிய மலராக செர்ரி மலர்கள் உள்ளன. இந்த மரங்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. குளிர் காலங்களில் இந்த மரங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.