வேலூர் : வேலூர் மார்க்கெட்டில் பொங்கலுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கதிரவனுக்கு படைக்கப்படும் செங்கரும்பு வேலூர் மாவட்டத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்பட தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் திருநாளுக்காக வேலூர் மார்க்கெட்டுக்கு ஒரு லாரியில் 300 கட்டுகள் என, 10 சரக்கு லாரிகளில் 3 ஆயிரம் செங்கரும்பு கட்டுகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டன.