சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரங்கநாதன் தெருவில் உள்ள உணவகத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.