ரூ.150 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை!: சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி.!!

சென்னை: சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டது. இந்தியன் வங்கியில் பெற்ற 150 கோடிக்கான கடன் நிலுவைத் தொகையை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா நகைக் கடையையும் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: