சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மேலாளர் ஒருவர், உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்மோகன் (29). இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சந்தீப்மோகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் உள்ள தனி அறையில் சிகிச்சையில் இருந்த சந்தீப் மோகன் சுயநினைவு இன்றி கிடந்தார். இதை பார்த்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து கிடந்தார். சந்தீப்மோகன் கையில் ஊசி செலுத்தப்பட்டிருந்தது. உடனே டாக்டர்கள் அந்த ஊசியை எடுத்து பார்த்த போது அது விஷ ஊசி என்பது தெரியவந்தது.