சுழற்சி முறையில் 50% மட்டுமே விமான நிலைய ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்: நிர்வாகம் உத்தரவு

சென்னை: சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்குவர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை விமான நிலையத்தில் நிர்வாகம், எலக்ட்ரிக்கல், டெக்னிக்கல், கிரவுண்ட் ஆபரேசன், ஃபயர், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 1,500 ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சென்னை விமான நிலையத்திலும் அத்தாரிட்டி ஊழியர்கள், ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களில் சுழற்சி முறையில் 50 சதவீதம் ஊழியர்களே பணிக்கு வரவேண்டும் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி உத்தரவிட்டுள்ளது. ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் வழக்கமாக வாரத்திற்கு 48 மணி நேரம் பணிக்கு வந்துகொண்டிருந்தனர். இனிமேல் வாரத்திற்கு 24 மணி நேரம் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ஒமிக்ரான் பரவலை தடுக்க நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மறு உத்தரவு வரும்வரை இந்த ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: