திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து 20ம் தேதி காலை கோயில் நடை சாத்தப்படும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.