தூத்துக்குடி: தூத்துக்குடியில் புறக்காவல் நிலைய கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராக்களை திருடிய 4 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் உப்பு சங்கம் அருகே வடபாகம் காவல் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புறக்காவல் நிலைய கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 சிசிடிவி கேமராக்களை திருடிச் சென்றனர்.