டெல்லி: டெல்லி ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு விழாவுக்கு தூய்மை பணியாளர், கட்டட தொழிலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. முன்களப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கு வர ஒன்றிய அரசு அழைத்துள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அணிவகுப்பை பார்க்க வாய்ப்பு தருவதே நோக்கம் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.