அபுதாபி: சர்வதேச சந்தையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏமன் தீவிரவாத அமைப்பினர் அபுதாபி மீது நடத்திய டிரோன் தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதில் தடை ஏற்படலாம் என்று சர்வதேச சந்தையில் ஐயம் ஏற்பட்டிருக்கிறது.