சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 1974ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமான பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், மேம்பாட்டு பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- முன்னாள் அமைச்சர்
- உ. மத்திவந்தன்
- ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்