மாவட்டம் முழுவதும் நேற்று 1,018 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. தொடர்ந்து, கடந்த 17 நாட்களில் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, ஜனவரி 10ம்தேதி 1054 பேருக்கு, 11ம்தேதி 893 பேருக்கு, 12ம்தேதி 932 பேருக்கு, 13ம்தேதி 901 பேருக்கு, 14ம்தேதி 1393 பேருக்கு, 15ம்தேதி 1478 பேருக்கு, 16ம்தேதி 1273 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று 1,018 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் 12,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் சிகிச்சை முடிந்து 954 பேர் வீடு திரும்பினர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7898 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்னர். தொற்று பாதிப்பில் மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: