பூஸ்டர் டோஸ் கால இடைவெளியை 6 மாதமாக குறைக்க கோரிக்கை ஆந்திர முதல்வர் தகவல்

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடா தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: 60 வயது நிரம்பியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி தற்போதுள்ள 9 மாத காலத்தை 6 மாதங்களாக குறைக்க வேண்டும். இதனால் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையை நாட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.’இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: