கரூர்: குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ‘‘மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்’’ முடிவு என அண்ணாமலை தெரிவித்தார். கரூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக இருப்பது குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் சென்றிருக்க கூடிய அணிவகுப்பு ஊர்தி ரிஜக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சியை சேர்ந்த சிலர், குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அணி வகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அந்த மாநிலத்தை பிரதிபலிக்க கூடிய ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்கும். இது அனைத்து ஆட்சியிலும் மினிஸ்டரி ஆப் டிபென்ஸ் (ராணுவ அமைச்சகம்) நடத்துகின்ற நிகழ்ச்சி. எந்த மாநிலத்தில் இருந்து யார் பங்கேற்பது என்பதை கூட அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.