60 வயதுக்கு மேல் உள்ளவரா நீங்கள்.. உங்கள் வீட்டுக்கே வந்து தடுப்பூசி செலுத்தப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஆகியோருக்கு மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும், பயணிக்கக் கூடிய நிலையில் உள்ள மற்றும் விருப்பமுள்ள இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களில் நேரில் சென்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம்.

Related Stories: