சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர், தேவர்சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பொதுப் பிரிவில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் பெண்களுக்கு, தேசூர் (திருவண்ணாமலை), மருதூர் (கரூர்), வாலாஜாபாத் (காஞ்சி), தலைஞாயிறு (நாகை), கீளாம்பாடி (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருப்பணந்தாள் (தஞ்சை), புதுப்பாளையம் (திருவண்ணாமலை), கீழ்வேளூர் (நாகை), இடைக்கழிநாடு (செங்கல்பட்டு), கணியூர் (திருப்பூர்), ஓவேலி (நீலகிரி), சின்னக்கம்பாளையம் (திருப்பூர்), கீழ்குந்தா(நீலகிரி), புதுப்பட்டி (தேனி), பூலாம்பாடி (பெரம்பலூர்), ஆயக்குடி (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), புலியூர்(கரூர்), பள்ளிகொண்டா(வேலூர்), முதூர்(திருப்பூர்), இலஞ்சி(தென்காசி), மீஞ்சூர்(திருவள்ளூர்), அச்சிறுப்பாக்கம்(செங்கல்பட்டு), சுந்தரபாண்டியாபுரம்(தென்காசி), உதயேந்திரம்(திருப்பத்தூர்), குளத்துப்பாளையம்(திருப்பூர்), வேடபட்டி(கோவை), தேவதானப்பட்டி(தேனி), மெலட்டூர்(தஞ்சை), நெய்க்காரப்பட்டி(திண்டுக்கல்), பேளூர்(சேலம்), காட்டுப்புதூர்(திருச்சி), கொரடாச்சேரி(திருவாரூர்), தொட்டியம்(திருச்சி), விரகனூர்(சேலம்), பெத்தநாயக்கன்பாளையம் (சேலம்), அடிக்கரட்டி(நீலகிரி), மரக்காணம்(விழுப்புரம்), ஹுலிகள்(நீலகிரி), பாலசமுத்திரம்(திண்டுக்கல்), வீரபாண்டி(தேனி) ஆகிய 43 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.