சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்துக்கு ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6,230 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதம்: 2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் 3 முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6,230 கோடி விடுவியுங்கள்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- தேசிய பேரிடர் நிவாரண நிதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமித் ஷா