சென்னை: புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி, பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுடெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் ‘ விடுதலை போராட்டத்தில் இந்தியா 75, சாதனைகள், தீர்வு’ ஆகிய தலைப்புகளில் காட்சிப்படம் மற்றும் ஊர்திகளை அமைக்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இந்த அணிவகுப்பில் ‘விடுதலை போராட்டத்தில் தமிழ்நாடு’ என்ற கருத்தில் தமிழக அரசு சார்பில் ஊர்தியை பங்குபெறச்செய்வதற்கான வரைபடம் அனுப்பப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- நரேந்திர மோடி
- தமிழர்கள்
- குடியரசு தின அணிவகுப்பு