வருசநாடு: வருசநாடு அருகே குண்டும், குழியுமாக உள்ள மலைச்சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.தேனி மாவட்டம், வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்டு காந்திகிராமம், முத்துநகர் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மலைச்சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல முறை தும்மக்குண்டு ஊராட்சி சார்பில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.