திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. அன்று மாலை லட்சக்கணக்கில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று வரை பக்தர்கள் திருவாபரணத்துடன் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்கலாம். நாளை (18ம் தேதி) வரை பக்தர்களுக்கு நெய்யபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு. அதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். மறுநாள் (20ம் தேதி) காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.