மும்பை: பங்கு சந்தை இன்று பிற்பகல் வரை மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் உணவு வேலைக்குப் பிறகு அட்டோமொபைல், டெலிகாம் மற்றும் மெட்டல் துறை பெற்ற எழுச்சியால் உயர்வுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85புள்ளிகள் உயர்ந்து 61,308 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 18,308 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.