திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் (73). 1973ம் ஆண்டு ‘ஜீசஸ்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார். சினிமா தவிர 42 நாடகங்களையும், 25 நடன நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். இவருக்கு கடந்த 14ம் தேதி கேரள அரசின் ஹரிவராசனம் விருது சபரிமலையில் வைத்து வழங்கப்பட்டது.