சென்னை: இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான வரியை நீக்கவும், பஞ்சு ஏற்றுமதியை தடை செய்யவும் நடவடிக்கை தேவை என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிகரித்துக்கொண்டே வரும் நூல்விலை உயர்வால் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மத்திய அரசிடம் மாநில அரசு எடுத்துக் கூற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.