புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்

டெல்லி: புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.இதற்கிடையில்,மாரடைப்பால் பிர்ஜூ உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

Related Stories: